உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ஊடகவியலாளர் மீது விசாரணை

பளை வைத்திய அதிகாரி சிவரூபன் தொடர்பான தகவல்களை சிங்கள ஊடகங்களுக்கு அனுப்பிவைத்த வவுனியாவின் ஊடகவியலாளர் தினசேன ரத்துகமகே விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 29.08.2019 திகதி வெளியான செய்தி தொடர்பிலேயே அவர் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே இந்த விசாரணை கொழும்பு பயங்கரவாதத்தடுப்பு விசாரணைப்பிரிவில் நடத்தப்பட்டுள்ளது.

சுமார் 6 மணிநேர விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பளை வைத்திய அதிகாரி சிவரூபன், விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க