உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

காணாமல் போனோருக்கு இடைக்கால கொடுப்பனவு

காணாமல் போனவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 6000 ரூபாவை மாதாந்த கொடுப்பனவாக வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் வெளியிடப்பட்ட காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரையின்படி இந்த இடைக்கால நிவாரணம் வழங்கப்படவுள்ளது.

இதன்படி இந்த இடைக்கால நிவாரணக்கொடுப்பனவு எதிர்வரும் ஒக்டோபரில் இருந்து “பிரசன்னமின்மை சான்றிதழை” Certificate of Absence” பெற்ற காணாமல் போனவர்களுக்காக அவர்களின் உறவுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 10 திகதி வழங்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க