விளையாட்டு செய்திகள்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: மானு-சவுரப் ஜோடிக்கு தங்கம்

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மானு பாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்பதக்கம் வென்றது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வந்தது.

இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் – அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது.

கருத்து தெரிவிக்க