உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘நித்திரைக்கு செல்லும் மஹேந்திரன் விழிக்கும்போது இலங்கையில்’ – கம்மன்பில

கே.பி என்ற குமரன் பத்மநாதனை கொண்டு வந்தமையை போன்று மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனும் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறார்.

தமது அரசாங்கம் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

கொழும்பில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், மஹேந்திரன் எங்கு ஒளிந்திருந்தாலும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று குறிப்பிட்டார்.

எனவே இலங்கையின் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு நித்திரைக்கு செல்லுமாறும் விழித்து பார்க்கின்றபோது அவர் இலங்கையில் இருப்பார் என்றும் கம்மன்பில தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க