உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கடலில் தத்தளித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம், கச்சதீவு அருகிலுள்ள கடலில் தத்தளித்த இந்திய படகு ஒன்றினையும்,படகில் இருந்த 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்றுக் காலை மீட்டுள்ளனர்.

மேலும் கடலில் தத்தளித்து சோர்வடைந்த மீனவர்களுக்கு உணவு மற்றும் பானங்களும் கடற்படையினரால் வழங்கப்பட்டது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட படகில் இருந்த 4 மீனவர்களும் 37 முதல் 60 வயது வரையிலான இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மீன்வள ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கருத்து தெரிவிக்க