உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புதுக்கடை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள செய்தி

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதிவரை கொழும்பு – புதுக்கடை நீதவான் நீதிமன்ற அதிகார பகுதிக்குள் போராட்டங்கள், பேரணிகள் என்பனவற்றை நடத்துவதற்குத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவராவது ஒரு தரப்பினரால், கூட்டம் அல்லது பேரணி நடத்தப்படும்போது, அமைதியாகவும், சட்டரீதியாகவும் நடத்துவதற்கு தடை இல்லை என்றபோதும், கலகம் விளைவிக்கும் செயற்பாடுகளைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது என்றும், சட்டரீதியான கடமைகளில் ஈடுபடுவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பொதுக்கூட்டங்களை நடத்துவதையும், பயணங்களை மேற்கொள்வதையும்; தவிர்க்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க