உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

90 % காணிகளை இராணுவம் மக்களிடம் கையளித்துள்ளது

யுத்தம் முடிவடையும்போது படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த காணிகளில் 90 சதவீதமான காணிகள் கையளிக்கப்பட்டுவிட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

யாழ். முற்றவெளியில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மீதமிருக்கும் காணிகள் விரைவில் விடுவிக்கப்படும்” என மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்று யாழில் இடம்பெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியில் வாக்குறுதியளிக்கப்பட்டதை போன்று கணிசமானளவு காணி விடுவிக்கபப்ட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க