உள்நாட்டு செய்திகள்புதியவை

அக்டோபர் முதல் வாரத்தில் எல்பிடிய பிரதேச சபை தேர்தல்

எல்பிடிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் தேர்தல் ஆணைக்குழுவின்தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஜனநாயக தேசிய முன்னணியால் எல்பிடிய பிரதேச சபை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுத்தாக்கல் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ளுமாறு நேற்று நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அத்துடன் அக்டோபர் முதல் வாரத்தில் தேர்தலை நடத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய எல்பிடிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க