உள்நாட்டு செய்திகள்புதியவை

அமெரிக்க அதிகாரிகளின் வருகை தொடர்பில் காவல்துறை விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே அமெரிக்க விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்தனர் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் சிலர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை தொடர்பில் பலர் கேல் எழுப்பியுள்ள நிலையில் அவர் இவ்வர்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பு தரப்பினரின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு மேலும் சில நாட்டை சேர்ந்த விசாரணையாளர்களும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் குறித்த விசாரணைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளமையினால், விசாரணை நடவடிக்கைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க