உள்நாட்டு செய்திகள்புதியவை

போதைப்பொருள் கடத்திய நபர் வத்தளை பகுதியில் கைது

முச்சக்கர வண்டியில் போதைப்பொருள் கடத்தி வந்தபோது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

வத்தளையில் நேற்று (ஆக. 28) இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன் போது போதைப்பொருள் பணியக (பி.என்.பி) அதிகாரிகள் 1.1 கிலோ ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் 413 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்தனர்.

மேலும், 38 வயதான குறித்த சந்தேகநபரிடம் இருந்து ரூ .124,890 பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இன்று வத்தளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்து தெரிவிக்க