உள்நாட்டு செய்திகள்புதியவை

‘பளை வைத்தியசாலை வைத்தியருடன் தொடர்பு பேணிய இருவர் கைது’

பளை வைத்தியசாலையின் வைத்தியருடன் தொடர்புகளை வைத்திருந்த இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பளை வைத்தியசாலை அத்தியட்சகரும் சட்ட மருத்துவ அதிகாரியுமான சின்னையா சிவரூபன், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அண்மையில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க