பொன்மொழிகள்

இறைபக்தி! ராமகிருஷ்ணர்

  • ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? தான் தரையில் இட்ட முட்டைகளின் மீது. அதுபோல் இல்லறத்தில் உனக்குரிய எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை.
  • கொல்லன், துருத்தியால் ஊதி, தனது உலைநெருப்பு, அணைந்துபோகாமல் பார்த்துக் கொள்வதைப்போல, ஸத்ஸங்கத்தினால் மனமானது சுத்தமாய் ஜொலிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தன் மனத்தை ஏமாற்றாத ஒருவனே பகவானது சந்நிதானத்தை அடையப்பெறுவான். அதாவது கள்ளங்கபடமற்ற தன்மையும் ,உண்மை அன்பும் பரலோக ராஜ்யத்திற்குப் பாதைகளாகும்.

 

கருத்து தெரிவிக்க