உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் CCTV கெமரா’

கொழும்பை அண்மித்த பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்படும் பொலிஸ் CCTV கெமரா கட்டமைப்பு மேலும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

வாகன இலக்கத் தகடுகளைத் தெளிவாக அறிந்து கொள்ளுதல், வாகன சாரதிகளின் முகங்களின் தெளிவான காட்சிகளைப் பெற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றுக்காக இந்தக் கட்டமைப்பு மேம்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, தற்போது கொழும்பில் காணப்படும் CCTV கெமரா கட்டமைப்பு 10 வருட கால பழமையானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இவை டிஜிட்டல் தொழில்நுட்பமாக மாற்றப்படவுள்ளதாகவும் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க