உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இனந்தெரியாத நபரினால் இருவர் சுட்டு கொலை

ஹங்வெல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

உந்துருளியில் வந்த இனந்தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க