உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வேட்பாளரை தெரிவு செய்து விட்டோம் – பிரதமர்

தேசிய ஜனநாயக முன்னணி விரைவில் உருவாக்கப்படும் என்றும், அதன் வேட்பாளரின் பெயர் மிகவிரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எமது கொள்கைகளுக்கு ஏற்ப, ஒரு வேட்பாளரை நாங்கள் தெரிவு செய்துள்ளோம். சரியான நேரத்தில் அவரது பெயரை அறிவிப்போம்.

கூட்டணியின் யாப்பு தொடர்பாக பங்காளிக் கட்சிகளிடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எனவே, விரைவில் தேசிய ஜனநாயக முன்னணி உருவாக்கப்படும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

போகம்பர கலாசார நிலையத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க