உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஆண்டு இறுதிக்குள் பலாலி விமான நிலைய சேவை ஆரம்பமாகும்

பலாலி விமான நிலையத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பமாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மூதூர்- மட்டக்களப்பு வீதி புனரமைப்புப் பணிகளை நேற்று முன்தினம் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, பலாலி, மட்டக்களப்பு விமான நிலையங்களை நாம் பயன்படுத்துவோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இருந்து பலாலி விமான நிலையத்துக்கு விமானங்கள் இயங்கத் தொடங்கி விடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க