உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

‘ஐ.தே.கவில் முன்பு பிரச்சினை இருந்தது; தற்போது இல்லை’

ஐ.தே.க நாட்டில் உள்ள கட்சிகளில் மிக சக்திவாய்ந்ததாகும். ஆகவே எமது கட்சி சரியான நபரை சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளராக முன்வைக்கும் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ராகம விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வை தொடர்ந்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

தன்னிச்சையான செயற்பாடுகளை கைவிட்டு கட்சியாக ஒன்றிணைந்து செயற்பட்டால் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க முடியும்.

ஒன்று சேர்த்து பாதுகாப்பது கடினம் எனவே நாங்கள் ஒற்றுமையாக இருக்க முயற்சி செய்கிறோம். கட்சிக்குள்ளும் கட்சியின் செயற்குழுவிலும் எந்தவித பிரச்சினையும் இல்லை என்பதை மிகுந்த பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன்.

முன்பு பல பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது இல்லை. நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். ஒழுக்கமாகவும், சட்டத்திற்கு உட்பட்டும் இந்த வெற்றியை நாங்கள் பெறுவது உறுதி என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.தே.க தனிமனிதனின் சொத்து அல்ல எனவும் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க