உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு; காரணம் வெளியானது

பல்கலைக்கழக மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்த நிலையில் பிரேத பரிசோதனை வெளியாகியுள்ளது.

அக்கறைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மூச்சுத்திணறல் காரணமாக மாணவன் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது .

குறித்த மாணவன் மூச்சுக்குழாயில் உணவு துண்டொன்று அடைத்த நிலையில் மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது என குறித்த பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மாணவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டன்சினன் அக்கரமலையை சேர்ந்த தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் மாணவன் ஜி.துர்கேஸ்வரன் திடீரென உயிரிழந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த மாணவனின் இறப்பு தொடர்பாக அக்கறைப்பற்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க