உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

ஐ.தே.கவுக்குள் மோதல் உக்கிரம்! சஜித் அணிக்கு ஆப்பு வைக்கிறார் ரணில்!!

கட்சி தலைமையையும் , கட்சி கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிடும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதன் ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக உறுப்பினர்களிடம் சுய விளக்கம் கோரப்படவுள்ளது. அதன்போது கட்சியின் யாப்பைமீறும் வகையில் செயற்பட்டிருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கபதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கட்சியின் அனுமதி இல்லாமல் பேரணிகளுக்கான ஏற்பாடுகளை செய்யும் தொகுதி அமைப்பாளர்களுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணிகள் நடத்தப்பட்டுவரும் நிலையிலேயே பிரதமர் இவ்வாறு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

கருத்து தெரிவிக்க