உள்நாட்டு செய்திகள்புதியவை

மதுபோதையில் வாகனம் செலுத்திய 10 ஆயிரம் பேர் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய பத்தாயிரத்து 54 பேர் கடந்த 49 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்ய கடந்த ஜூலை மாதம் 5 திகதி ஆரம்பமான விசேட நடவடிக்கையின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சாரதிகளிடமிருந்து 261 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டிருப்பதாகவும் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

கருத்து தெரிவிக்க