பொன்மொழிகள்

அறிவுரை! சாணக்கியர்.

  • கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.
  • முட்டாளான மாணவனுக்குப் பாடம் கற்பிப்பதாலும், கெட்டவளான பெண்ணைக் காப்பாற்றுவதாலும் ஒரு அறிவாளி துன்பமடைந்து அவதியுறுகின்றனர்.
  • வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

கருத்து தெரிவிக்க