உள்நாட்டு செய்திகள்புதியவை

சஜித்தின் கூட்டத்தை புறக்கணித்தார் சாகல!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து மாத்தறையில் இன்று மக்கள் பேரணி நடத்தப்பட்டது.

நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட எம்.பியான அமைச்சர் சாகல ரட்னாயக்க பங்கேற்கவில்லை.

ஐ.தே.கவின் மாத்தறை மாவட்டத்தின் ஏனைய எம்.பிக்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க