உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

‘எனக்கு ஜனாதிபதி மாளிகை வேண்டாம்’ – சஜித் அறிவிப்பு!

” நான் ஜனாதிபதியானால் எனக்கு மாடமாளிகை வாழ்க்கை தேவையில்லை. மக்களுடன் மக்களாக கிராமங்கள்தோறும் வாழ்ந்து பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைப்பேன்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறையில் இன்று (23) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதி. எனவே, நவம்பரில் நவயுகத்தை நோக்கி புறப்படுவதற்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

‘ஶ்ரீலங்கா பெஸ்ட்’ எனும் வேலைதிட்டத்தை ஆரம்பிக்கவுள்ளேன். அனைத்து விடயங்களிலும் இலங்கைக்குதான் முன்னுரிமை வழங்கப்படும்.

எனக்கு மாடமாளிகை வாழ்க்கை தேவையில்லை. அதை நிச்சயம் நிராகரிப்பேன். மக்கள் மத்தியிலேயே வளர்ந்தேன். மக்களுக்காகவே வாழ்கின்றார். மரணம் என ஒன்று நிகழ்ந்தால் அதுவும் மக்கள் மத்தியிலேயே நடக்க வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க