உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு எந்த தடையும் இல்லை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடன் நேற்று (22) நடைபெற்ற கூட்டத்தில் பேசியபோதே கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை கூறினார்.

தான் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் தற்போது இலங்கை கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் முயற்சியில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுவதாக தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஸ, எவ்வாறாயினும், தற்போது தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு எந்த தடைகளும் இல்லை என்றும் கூறினார்.

இந்த வருட இறுதிக்குள் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஸ அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க