உள்நாட்டு செய்திகள்புதியவை

பாதுகாப்பு பிரதானிக்கும் பதவி நீடிப்பு!

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, சேவை நீடிப்பு வழங்கி ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக நியமிக்கப்பட்ட அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, 2019 ஓகஸ்ட் 22ஆம் திகதியுடன் ஓய்வுபெறவிருந்தார்.

இந்தநிலையில், அவருக்கு 2019 டிசெம்பர் 31ஆம் திகதி வரை சேவை நீடிப்பு அளிக்கும் உத்தரவை ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன நேற்று வழங்கியுள்ளார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக 2017இல் பொறுப்பேற்க முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியில் இருந்து இலங்கையின் கடற்படைத் தளபதியாக அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பணியாற்றியிருந்தார்.

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் இவர் தொடர்புபட்டிருக்கிறார் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கருத்து தெரிவிக்க