உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்.. !

பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக சுயாதீன ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

குறித்த கடிதத்தின் நகல் ஒன்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிமல் லங்சா,இந்திக்க அநுருத்த , அருந்திக்க பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் சுதர்ஷனி பெர்ணான்டோ புல்லே ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே குறித்த கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க