உள்நாட்டு செய்திகள்

சு.கவில் இணையுமாறு கோட்டாவுக்கு அழைப்பு!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணையுமாறு கூட்டு எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.

” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை கோட்டாபய ராஜபக்ச இன்னும் பெறவில்லை. எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து அவருடன் நாம் பேச்சு நடத்துவோம். எமது பக்கத்திலும் வேட்பாளர் ஒருவர் இருக்கிறார். ஆனால், இருவரை களமிறக்கி நெருக்கடி நிலைமையைஉருவாக்க விரும்பவில்லை.

பொதுஜன பெரமுனவால் தனித்து வெற்றிபெறமுடியாது. சுதந்திரக்கட்சியின் ஆசிர்வாதமும் அவசியம்.ஆகவே, கோட்டாபய ராஜபக்ச சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டால் அவரின் வெற்றிவாய்ப்பு உறுதியாகும். இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம்.” என்றும் மஹிந்த அமரவீர கூறினார்.

கருத்து தெரிவிக்க