உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

வெளிவாரி பட்டதாரிகள் 5 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு

இம்மாத இறுதிக்குள் வெளிவாரி பட்டதாரிகள் 5 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

தற்போது வரை 16 ஆயிரத்து 800 பட்டதாரிகளுக்கு அரச தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார்.

இதற்கு முன்னர் அபிவிருத்தி அதிகாரிகளாக 4 ஆயிரத்து 800 பேருக்கு அரசாங்கம் நியமனம் வழங்கியது.

அதற்கமைய எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும் போது எமது அரசாங்கம் 25 ஆயிரம் பேருக்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பை வழங்கியிருக்குமென இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அளவத்துவல தெரிவித்தார்.

இதேவேளை பல கட்டங்களின் கீழ் அரச தொழில்வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜே.சி.அளவத்துவல மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க