இந்தியா

சீனா அத்துமீறல்: பிரதமர் முக்கிய ஆலோசனை

புதுடில்லி: இந்திய எல்லை பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகளுடன் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. லடாக்கில் இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்நாட்டு வீரர்கள் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை சமாளிக்க இந்திய ராணுவமும் குவிக்கப்பட்டுள்ளது. இதனால்எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, முக்கிய ஆலோசனை நடத்தியதாக டில்லி தகவல்கள் வெளியிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக முப்படைத் தளபதிகள் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தை சந்தித்து எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து விளக்கினர்.

கருத்து தெரிவிக்க