உள்நாட்டு செய்திகள்புதியவை

நாட்டை கொண்டு நடத்துவதற்கான தகுதி என்னிடம் உண்டு: சஜித்

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு இராணுவப் பாதுகாப்பு மாத்திரம் போதாது என வீடமைப்பு, கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் இன்று (திங்கட்கிழமை) ‘ஸ்ரீமத் அலுவிஹாரகம’ வீடமைப்புத் திட்டத்தை, திறந்து வைத்து உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இராணுவப் பாதுகாப்புடன் பொருளாதாரம், சமூக, மற்றும் அரசியல் பாதுகாப்பையும் நாட்டில் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள சகல பிரிவுகளையும் பாதுகாப்பதற்கான தகுதி என்னிடம் இருக்கின்றது அத்துடன் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்.

இதேவேளை, எதிர்காலத்தில் பெண்களின் அடிப்படை பொருளாதார கொள்கைகள் கொண்ட நாட்டை உருவாக்கவுள்ளோம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க