உள்நாட்டு செய்திகள்புதியவை

மத்திய வங்கி ஆளுநருக்கு ‘தேசமான்ய’ பட்டம்

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமிக்கு தேசமான்ய பட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்குவார் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று (ஆகஸ்ட் 19) வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச நாடாண்டு மண்டபத்தில் ஜனாதிபதியிடமிருந்து தேசமான்ய பட்டத்தை பெறும் ஆறு நபர்களில் மத்திய வங்கி ஆளுநர் இருப்பர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு இந்த நிகழ்வில் மேலும் பல உயரிய பட்டங்கள் பலருக்கு வழங்கப்படவுள்ளது

இதேவேளை ஜப்பானிய சிரேஷ்ட தூதுவர் யசுஷி ஆகாஷிக்கு ஜனாதிபதி ‘இலங்கை ரத்னா’ பட்டத்தை வழங்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க