உள்நாட்டு செய்திகள்புதியவை

சலூன் முகாமையாளர் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

இந்த மாதம் கொம்பெனித்தெருவில் உள்ள சலூன் முகாமையாளரை தாக்கியதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் செப்டம்பர் 2 ஆம் திகதி வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதன்போது அடுத்த விசாரணையின் போது அடையாள அணிவகுப்புக்காக சந்தேக நபர்களை ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

பெண் ஒருவரை குறித்த நபர்கள் கிண்டல் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது குறித்த முகாமையாளரை தாக்கியதாக சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சலூன் முகாமையாளர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

கருத்து தெரிவிக்க