உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

குப்பை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது

கொழும்பில் இருந்து அறுவக்காடு குப்பை சேகரிப்பு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச்சென்ற பாரவூர்திகள் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக
காவல் துறை தெரிவித்துள்ளது.

மூன்று பாரவூர்திகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் அறுவக்காடு பகுதிக்கு குப்பைகளை கொண்டு வருவதற்கு மக்கள் பல்வேறு சந்தர்பங்களில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடதக்கது

கருத்து தெரிவிக்க