உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

மாவதகமவிற்கான அபிவிருத்தித் திட்டங்கள் பிரதமரினால் மக்களிடம் கையளிப்பு

அரசாங்கத்திற்கு நிலையான அதிகாரமோ, ஜனாதிபதி அதிகாரமோ இல்லாத நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்திப் பணிகளை கடந்த காலங்களில் முன்னெடுத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாவதகமையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

குறித்த சகல அதிகாரங்களை பெற்றுக் கொண்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேலும் விரைவாக முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவத்தகம பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் பிரதமர் இதன் போது மக்கள் பாவனைக்காக கையளித்தார்.

கருத்து தெரிவிக்க