உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ச.மாட்டின் டயஸ் எழுதிய ‘இலகு ஆங்கிலம்’ நூல் மன்னாரில் வெளியீட்டு!

ஓய்வு பெற்ற கோட்டக் கல்வி அதிகாரி ச.மாட்டின் டயஸ் எழுதிய ‘இலகு ஆங்கிலம்’ நூல் வெளியீட்டு விழா நேற்று இடம்பெற்றது.

நேற்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சபை கோட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் குறித்த நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.

குறித்த விளவிற்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் மற்றும் விருந்தினராக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் ஜே.ஜே.பிறட்லி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது வடமாகாண பிரதி பிரதம செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமேல் குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க