உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

‘சோபா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சை நிறுத்தியது அமெரிக்கா’

ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை இலங்கையுடனான, சர்ச்சைக்குரிய சோபா உடன்பாடு குறித்த பேச்சுக்களை நிறுத்தி வைப்பதாக, இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் அலய்னா பி.ரெப்லிட்ஸ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது, தமது நாட்டின் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை சந்திக்க அமெரிக்க தூதுவர் சில வாரங்களுக்கு முன்னரே, விருப்பம் வெளியிட்டிருந்தார், எனினும், அத்தகைய கூட்டம் சாத்தியமில்லை என்று ஜனாதிபதி வருத்தம் தெரிவித்திருந்தார்.

அத்துடன், மிலேனியம் சவால் நிதியத்தின் 480 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையைப் பெறுவதற்கான கால அவகாசம் இப்போது முடிந்து விட்டது என்றும், அமெரிக்கத் தூதுவர் ரெப்லிட்ஸ், ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.

சோபா உடன்பாட்டில் தனது ஒப்புதலின்றிக் கையெழுத்திட முடியாது என்று ஜனாதிபதி முன்னர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, இலங்கையுடனான புதிய அமெரிக்க துணைத் தூதுவரை அறிமுகப்படுத்துவதற்காக, அலய்னா ரெப்லிட்ஸ், இலங்கை ஜனாதிபதியுடன் மற்றொரு சந்திப்புக்கு அனுமதி கோரியுள்ளார்.

கருத்து தெரிவிக்க