உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பழுதடைந்த பாலத்தினால் ஆபத்தை எதிர்கொள்ளும் மாணவர்கள்

மஸ்கெலிய புளூம்பீல்ட் பாடசாலைக்கு செல்லும்  பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் மாணவர்கள் ஆபத்தை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த பாடசாலையில்  அறுநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்கள் பாடசாலைக்கு செல்லும் இரண்டு பாதைகளிலும்  சிரிய ஆறுகள்  காணப்படுகிறது.

அதில் ஒருபக்க பாதையானது  மரக்குற்றிகளால் பாலம்  போடப்பட்டிருக்கிறது.

அந்த பாலம்  தற்போது உக்கிய நிலையில் காணப்படுகின்றது.

மற்றைய பாதையில்  செல்லும் போது  நீரோடையில் இறங்கி செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது.

இந்த இரு பாதைகளுமே  மழை காலங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதனால் உயிராபத்திலிருந்து இந்த பாடசாலை மாணவர்களை காப்பாற்ற முறையான பாலம்  ஒன்றை அமைத்து தருமாறு ஆசிரியர்களும் இப்பகுதியில் உள்ள பெற்றோர்களும்  கோரிக்கைவிடுக்கின்றனர் .

கருத்து தெரிவிக்க