உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

கட்சி அதிகாரத்தை கைப்பற்ற சஜித் அணி வியூகம்! செப். 6இல் புரட்சி!!

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச பெயரிடப்படாவிட்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சஜித் அணி தயாராகிவருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின் தவிசாளர் பதவி தவிர ஏனைய பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு சஜித் அணி தயார் நிலையிலேயே இருப்பதாகவும், கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வியூகமே இதுவென்றும் கூறப்படுகின்றது.
ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய செயற்குழுவில் ரணிலுக்கு விசுவாசமானவர்களே அங்கம் வகிக்கின்றனர் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க