உள்நாட்டு செய்திகள்

முன்னிலை சோஸலிசக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டி!

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியும் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் என முன்னிலை சோஸலிசக்  கட்சி அறிவித்துள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன என்றும், கூட்டணி அமைப்பதற்கு பல அமைப்புகள் முன்வந்துள்ளன என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பியில் அங்கம் வகித்த உறுப்பினர்களே கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக வெளியேறி முன்னிலை சோஸலிசக் கட்சியை உருவாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

கருத்து தெரிவிக்க