உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மேலும் மூன்று மாதிரி கிராமங்கள் மக்களிடம் கையளிக்க நடவடிக்கை

மேலும் மூன்று மாதிரி கிராமங்கள் இன்று மக்கள் உரிமைக்கு கையளிக்கப்படவுள்ளன.

அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமகாராம பிரதேச செயலாளர் பிரிவில் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

செமட்டசெவன வீடமைப்பு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 249வது, 250வது மற்றும் 251வது ஆகிய கிராமங்களே இன்று மக்கள் உரிமைக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2015ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த வீடமைப்பு வேலைத்திட்டத்தினூடாக 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான மாதிரி கிராமங்களின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இன்றையதினம் வீட்டு உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க