உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

செஞ்சோலையில் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி

சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் கடந்த 2006 ஆம் ஆண்டு இதே தினம் காலை வேளையில் செஞ்சோலை வளாகத்தில் நடாத்திய மிலேச்சத்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் அங்கு இருந்த பாடசாலை மாணவர்கள் பணியாளர்கள் உட்பட பலர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

அந்த வகையில் உயிரிழந்த உறவுகளின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகின்றது

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இன்று மாலை 4 30 மணியளவில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கட்சியினுடைய உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் ள் தெரிவித்துள்ளார்கள்.

கருத்து தெரிவிக்க