உள்நாட்டு செய்திகள்புதியவை

பகலில் எதிர்த்து இரவில் உறவாடுவது முறையல்ல: சாடும் சரத்

பகலில் எதிரணியினருக்கு எதிராக பேசிவிட்டு இரவில் அவர்களை சந்தித்து உறவாடும் கட்சி ஒருபோதும் வெற்றிப் பெற முடியாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசிய கட்சியினை சாடியுள்ளார்.

றாகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பகலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை எதிராக கருத்துரைப்பவர்கள் இரவில் அவரை சந்தித்து உறவாடுவது உகந்ததல்ல இது கட்சியை பாதிக்கும் செயலாகும் என்று கூறினார்.

அத்துடன் ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றது என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு விரைந்து தீர்வு காணாத பட்சத்தில் கட்சி சீர்குலையும் நிலை ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க