உள்நாட்டு செய்திகள்புதியவை

களுகங்கையை அண்டி வாழும் மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை

தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதனை அண்டிய பகுதியில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.

குறிப்பாக புளத்சிங்கள, பலிந்தன்நுவர, கிரியெல்ல, இங்கிரிய, மாதுருவெல போன்ற தாழிடங்களில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கருத்து தெரிவிக்க