உள்நாட்டு செய்திகள்புதியவை

கழிவு ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: ஒருவர் காயம்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பிலிருந்து கழிவுகளை ஏற்றிச் சென்ற டிபர் ரக பாரவூர்தி, மற்றொரு கழிவு ஏற்றி சென்ற டிபர் ரக பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி ஒருவர் காயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

புத்தளம் அருவக்காட்டில் கழிவுகளை கொட்டுவதற்காக இன்று அதிகாலை கொழும்பில் இருந்து சென்ற டிபர் ரக பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான டிபர் ரக பாரவூர்தியில் இருந்து கழிவுகளை வேறுபாரவூர்திகளுக்கு மாற்றி அருவக்காட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கொழும்பில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளை அருவக்காட்டில் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க