உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

‘கூர்மையான ஆயுதத்தால் தாக்கி இரண்டு பேர் கொலை’

குச்சவேலி மற்றும் பேருவளை பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால்தாக்கி இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

குச்சவேலியில் மதுரங்குடா பகுதியில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறின் போது 46 வயது நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

நேற்றிரவு 12 மணியளவில் இந்த தாக்குதல் நடைபெற்றதுடன் குறித்த கொலை தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை குச்சவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருவளையில் உள்ள கரடகோடா பகுதியில் தனிப்பட்ட தகராறின் போது 27 வயது இளைஞன் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டதாக பேருவளை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க