உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

எரிபொருள் விலை சூத்திரக் குழு இன்று கூடுகின்றது

எரிபொருள் விலை திருத்தம் குறித்து விவாதிக்க எரிபொருள் விலை சூத்திரக் குழு ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதி ஒன்று கூடும்.

அதன்படி, கடந்த 10 ஆம் திகதி பொது விடுமுறை என்பதால் எரிபொருள் விலை சூத்திரக் குறித்த குழு ஒன்று கூடவில்லை.

இதனால் குறித்த குழு இன்று கூடுகின்றது.

இதற்கிடையில், கடந்த மாதம் கூடியிருந்த எரிபொருள் விலைக் குழு எரிபொருள் விலையைக் குறைக்க முடிவு செய்தது.

அதன்படி, ஒரு லிட்டர் ஓக்டைன் 92 ரக பெற்றோல் விலை ரூ .2 ஆகவும், ஒரு லிட்டர் ஓக்டைன் 95 ரக பெற்றோல் ரூ. 5 ஆகவும், சுப்பிரி டீசல் ரூ. 5 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க