உள்நாட்டு செய்திகள்புதியவை

‘மஹிந்த ஆட்சியின் கொலை, கடத்தலை மறக்க முடியாது’

ஊடகவியலாளர்கள் கொலை, சுற்றுலாப்பயணிகள் வன்புணர்வு மற்றும் வெள்ளை வான் கடத்தல்களை மறந்து விடமுடியாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று பொதுஜன பெரமுனவின் புகழ்பாடுபவர்கள். கடந்த அரசாங்கத்தின் முறைக்கேடுகளை மீள நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் சந்திப்பு தற்போது பதுளை நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

குடும்ப ஆட்சியினை இல்லாதொழித்து ஜனநாயகம் மிக்க அரசாங்கத்தை தோற்றுவிக்கவே கொண்டே ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒருபோதும் ஆட்சியினை எமது அரசாங்கம் ஒப்படைக்காது. நிச்சயம் மீண்டுமொரு அரசியல் பின்னடைவினை பொதுஜன பெரமுன எதிர்க்கொள்ளும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க