உள்நாட்டு செய்திகள்புதியவை

‘கூட்டணி தொடர்பில் அடுத்த வாரம் பதில் கிடைக்கும்’

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் அமைக்கவுள்ள கூட்டணி தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு கிடைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும், கூட்டணி அமைப்பதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தேர்தலை மையப்படுத்தி இதுவரையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.

கொள்கை ரீதியிலான இணக்கப்பாடு தொடர்பிலே கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆகவே தற்போது எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாக காணப்படுகின்றது.

கூட்டணி குறித்த பல்வேறு கேள்விகளுக்கு எதிர்வரும் வாரத்தில் நிச்சயம் தீர்வு முன்வைக்கப்படும். இது இரு தரப்பின் அரசியல் செயற்பாடுகளையும் பலப்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க