உள்நாட்டு செய்திகள்புதியவை

படகு விபத்து: இருவர் மாயம்

படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளனர்.

பமுனுகம தல்தியவத்த மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்ற குறித்த படகே நேற்று மாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 53 மற்றும் 58 வயதுடைய இருவர் காணாமல் போயுள்ளனர்.

விபத்துக்குள்ளான படகு ஏனைய மீனவர்களால் மீட்கப்பட்டுள்ள நிலையில் காணாமல் போனோர் தேடப்பட்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க