உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

புத்தர் சிலை சேதம்; சந்தேக நபர்கள் மீண்டும் விளக்கமறியலில்!

மாவனெல்லை பகுதிகளில் புத்தர் சிலைகளுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 15 சந்தேக நபர்களும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் மாவனெல்லை நீதவான் உபுல் ராஜகருணா முன்னிலையில் அவர்கள் ஆஜராகினர்.

மேலும், அவர்களை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் 5 பேர் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இதன்போது குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க